2 ஆயிரம் நோட்டை மாற்ற கூட்டம் அதிகமாக வரும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், எதிர்ப்பார்த்த அளவுக்கு நேற்று வரை கூட்டம் வரவில்லை. வழக்கமாக வங்கிகளுக்கு வருபவர்களின் கூட்டமே வங்கிகளில் காணப்பட்டு வருகிறது. சில வங்கிகளில் மட்டும் 2 ஆயிரம் நோட்டை மாற்ற சற்று கூட்டம் அதிகமாக இருந்து வருகிறது. கெடு விதிக்கப்பட்டுள்ள கடைசி ஒரு வாரத்தில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதுவும் வங்கிகளில் ஒருவருக்கு பத்து 2 ஆயிரம் நோட்டுக்கள் மட்டுமே ஒரே நேரத்தில் மாற்ற முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு மேல் பணத்தை வைத்துள்ளவர்கள் பான்கார்டு எண்ணை காண்பித்து வங்கிகளில் டெபாசிட் தான் செய்ய முடியும் என்ற நிலை உள்ளது.
இந்த நிலையில் நேற்று ஏராளமானோர் சென்னை ராஜாஜி சாலையில் உள்ள ரிசர்வ் வங்கி முன்பு குவிந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் நின்று 2 ஆயிரம் ரூபாய் நோட்டை மாற்றி சென்றனர். வங்கிகளில் ரூபாய் நோட்டு மாற்றி கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டதில் இருந்து கூட்டம் காணப்படாத நிலையில், நிறைய பேர் பணத்தை மாற்ற ரிசர்வ் வங்கி முன்பு குவிந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
The post 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை மாற்ற சென்னை ரிசர்வ் வங்கி முன்பு குவிந்த மக்கள்: நீண்ட வரிசையில் நின்றனர் appeared first on Dinakaran.