பாதுகாப்பு துறையில் தொழில்நுட்ப முன்னேற்றம் அவசியம்: ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தல்

புதுடெல்லி: பாதுகாப்புத்துறையில் தொழில்நுட்ப முன்னேற்றம் அவசியம் என ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார்.

டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்:
இந்திய ராணுவ வீரர்களின் வீரம் பற்றி உலக நாடுகள் புகழ்ந்து பேசுகின்றன. ஆனால் நாட்டின் எல்லைப் பகுதியில் சீனா, பாகிஸ்தான் நாடுகளால் இரட்டை அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் நாட்டின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய சவால்கள் உள்ளன. இத்தகைய சூழலில் பாதுகாப்புத்துறையில் தொழில்நுட்ப முன்னேற்றத்தில் நாம் கவனம் செலுத்த வேண்டும். இதற்கான வழி தொழில்நுட்ப ஆராய்ச்சிகளை மேற்கொள்வதே. அதற்கு பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பும், கல்வி நிறுவனங்களும் இணைந்து செயல்பட வேண்டும். இது காலத்தின் கட்டாயம் என்று தெரிவித்தார்.

The post பாதுகாப்பு துறையில் தொழில்நுட்ப முன்னேற்றம் அவசியம்: ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: