இந்த வருட பருவ மழைக்கு முந்தைய கண்கடுப்பு பணிகள் காலை முதல் துவங்கியது. ஆறு நாட்கள் நடைபெறும் இந்த பணியில் ஒவ்வொரு குழுவிலும் சுமார் மூன்று பேர் வீதம் 37 குழுக்களாக பிரிந்து சுமார் 111 பேர் இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜிபிஎஸ் கருவி, தர்மா மீட்டர் மற்றும் இப் பணிக்காக பிரத்யோகமாக தயாரிக்கப்பட்ட செல்போன் செயலி மூலம் இந்த வருடம் கணக்கெடுக்கும் பணி நடைபெறுகிறது. இதில், வனவிலங்குகளின் நேரடி பார்வை, எச்சம், கால் தடம், நீர் நிலைகளில் வனவிலங்கு நடமாட்டம் போன்றவற்ற வைத்து கணக்கெடுக்கும் பணி நடைபெறுகிறது. தன்னார்வலர்களை தவிர்த்து வனத்துறையினர் தனித்து இருந்த கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
The post முதுமலையில் பருவமழைக்கு முந்தைய வனவிலங்கு கணக்கெடுப்பு பணி துவக்கம் appeared first on Dinakaran.