கடந்த 4ம் தேதி ரஷ்ய அதிபரின் கிரெம்ளின் மாளிகை மீது தாக்குதல் நடத்த உக்ரைன் அனுப்பிய 2 டிரோன்களை சுட்டு வீழ்த்தியதாக ரஷ்யா கூறியிருந்தது. மேலும் உக்ரைன் ரஷ்ய எல்லையில் உக்ரைன் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருவதாகவும் ரஷ்யா குற்றம்சாட்டி வருகிறது. ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைன் ரஷ்ய எல்லைப் பகுதியில் 2வது நாளாக நேற்றும் டிரோன்கள் தாக்குதல் நடத்தின. இதற்கு உக்ரைன் மீது ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது. ஆனால் இதனை மறுத்துள்ள உக்ரைன், ரஷ்ய அதிபருக்கு எதிரான கிளர்ச்சியாளர்களே இந்த தாக்குதலை நடத்தியதாக மறுப்பு தெரிவித்துள்ளது.
The post ரஷ்ய எல்லையில் 2ம் நாளாக டிரோன் தாக்குதல் appeared first on Dinakaran.