காட்டு மாட்டால் உயிரிழப்பு ஏற்பட்ட குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் வீதம் முதற்கட்ட நிதியுதவியை கேரள மாநில அரசு வழங்கியுள்ளது. இதே போல் அப்பகுதியை ஒட்டிய கொல்லம் ஆயூரில் காட்டுமாடு தாக்கி சாமூவேல் வர்கீஸ் என்பவர் உயிரிழந்தார். மொத்தம் மூன்று பேர் காட்டு மாடுகள் தாக்கி அடுத்தடுத்து பலியானதை கண்டித்து பாலக்காடு மாவட்டம் மங்கலம் அணை பகுதி பொன்கண்டம் பகுதியில் மாநில விவசாயிகள் சங்கத்தினர் நேற்று இரவு தீப்பந்தம் ஏந்தி போராட்டம் நடத்தினர். அப்போது பொதுமக்கள் உயிருக்கு வனவிலங்குகளிடம் இருந்து பாதுகாப்பு அளிக்க வேண்டும், வனவிலங்குகளால் பயிர்கள் சேதமடைந்தவர்களுக்கு நிதியுதவி வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்ைக களை வலியுறுத்தினர். இதே போல் கொல்லம் உள்ளிட்ட சில மாவட்டங்களிலும் வனத்துறையை கண்டித்து விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.
The post காட்டு மாடு தாக்கி 3 பேர் உயிரிழப்பு: விவசாயிகள் தீப்பந்தம் ஏந்தி போராட்டம் appeared first on Dinakaran.