கஞ்சா விற்றவர் சிக்கினார்

 

கோவை, மே 23: கோவை உக்கடம் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது லங்கா கார்னர் ரயில்வே பாலத்தின் அருகில் வாலிபர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். அதில், அவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. போலீசார் கஞ்சா விற்ற கோவையில் தங்கி கூலி வேலை பார்க்கும் தூத்துக்குடி மாவட்டம் எப்போதும் வென்றான் பகுதியை சேர்ந்த முத்து தங்கம்(19) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 125 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர், அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post கஞ்சா விற்றவர் சிக்கினார் appeared first on Dinakaran.

Related Stories: