இதையடுத்து, சவுஜன்யாவை அவரது பெற்றோர் அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்குள்ள மருத்துவர்கள் சிகிச்சைக்கு அதிகம் செலவாகும் என்று தெரிவித்துள்ளனர். அவ்வளவு பணம் தன்னால் செலவு செய்ய முடியாது என்று கூறிய தஸ்ரு மகளை வீட்டுக்கு அழைத்து வந்தார். இந்நிலையில் கடந்த 3 மாதங்களாக சிறுமியின் கண்களில் இருந்து பருத்தி உருண்டைகள், எறும்புகள், முடி, அரிசி தானியங்கள், நகங்கள், காகித துண்டுகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் வெளியே வந்துகொண்டே இருக்கிறதாம். இவ்வாறு கழிவுகள் வரும்போது கண்ணில் கடுமையான வலி இருப்பதாக சிறுமி தனது பெற்றோரிடம் கூறி அழுகிறார். இந்நிலையில் இதையறிந்த அப்பகுதியினர் மட்டுமின்றி சுற்று வட்டார கிராம மக்களும் வந்து பார்த்து செல்கின்றனர்.
கூலித்தொழிலாளின் மகளுக்கு ஏற்பட்டுள்ள இந்த பாதிப்பை சரி செய்ய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சிறுமியின் கண்களில் இவ்வாறு கழிவுகள் வெளியேறுவது ஏன், இதற்கான காரணம் என்ன என்பது யாருக்கும் தெரியவில்லை. சவுஜன்யாவை முதலில் பரிசோதித்த தனியார் மருத்துவமனை டாக்டர்கள், அவரின் வியாதி குறித்து என்ன கூறினார்கள் என்றும் பெற்றோருக்கு சொல்லத் தெரியவில்லை.
The post 6 வயது சிறுமியின் கண்களில் இருந்து முடி, நகம், கழிவு வெளியேறும் வினோதம்; சிகிச்சைக்கு உதவ பெற்றோர் கோரிக்கை appeared first on Dinakaran.
