அரசு கல்லூரிகளில் சேர்க்கை கால நீட்டிப்பு செய்ய வலியுறுத்தல்

கடலூர், மே 21: கடலூர் மாவட்ட மார்க்சிஸட் கம்யூனிஸ்ட் குழு விடுத்துள்ள அறிக்கையில், பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளிவந்து மாணவர்கள் மேல் படிப்புக்கு கல்லூரிகளில் சேர விண்ணப்பித்து வருகின்றனர். கல்லூரிகளில் விண்ணப்பிப்பதற்கு வருமானம், ஜாதி, இருப்பிட சான்றிதழ் பெறுவதற்கு இ-சேவை மையங்களில் இணைய சேவை குளறுபடியால் பல மணி நேரம் காத்து கிடக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. விண்ணப்பித்த பிறகு கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், வட்டாட்சியர் சான்றுக்காக காத்து கிடக்கும் நிலை உள்ளது. சான்றிதழ் பெறுவதற்கு தாமதமாவதால் கல்லூரிகளில் விண்ணப்பம் போடுவதற்கு காலதாமதம் ஆகிறது. எனவே தமிழ்நாடு அரசு கல்லூரிகளில், விண்ணப்பங்கள் பெறுவதற்கான கடைசி தேதியை தள்ளி வைப்பதற்கு ஏற்பாடு செய்திட வேண்டும். அனைத்து இ- சேவை மையங்களை முறைப்படுத்த வேண்டும். அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் சான்றிதழ் கேட்டு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு ஒரே நாளில் உடனுக்குடன் கிடைப்பதற்கான ஏற்பாடு செய்திட வேண்டும், என தெரிவித்துள்ளார்.

The post அரசு கல்லூரிகளில் சேர்க்கை கால நீட்டிப்பு செய்ய வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: