இதுகுறித்து மதுவிலக்கு உதவி ஆணையர் வரதராஜன் கூறும்போது, ‘’அண்ணாநகர் மாவட்டம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு சார்பாக கள்ளச்சாராயம், கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்வது, கடத்துவது போன்ற சம்பவங்கள் குறித்து பொதுமக்கள் உடனுக்குடன் மதுவிலக்கு போலீசாருக்கு தெரிவிக்க 6382318480 என்ற செல்போன் நம்பரை அறிமுக படுத்தியுள்ளோம். இந்த நம்பர் மூலம் வாட்ஸ்அப் மற்றும் குறுஞ்செய்தியாகவும் தகவல் தெரிவிக்கலாம்.
குறிப்பாக முக்கிய பகுதியாக கருதப்படும் கோயம்பேடு மார்க்கெட், பேருந்து நிலையம், திருமங்கலம் மால்கள் ஆகிய பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகிறது. அதில் செல்போன் நம்பர் மூலம் கள்ளச்சாராயம், கஞ்சா போன்ற போதை பொருட்கள் விற்பனை செய்வது குறித்து தகவல் தெரிவிப்பவர்களின் பெயர் மற்றும் அவர்களது விவரங்கள் ரகசியம் காக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் தைரியமாக புகார் தெரிவிக்கலாம்’ என்றார்.
The post அண்ணாநகர், கோயம்பேடு காவல் மாவட்டத்தில் கள்ளச்சாராயம், கஞ்சா விற்பனை குறித்து வாட்ஸ்அப் எண்ணில் புகார் அளிக்கலாம்: போலீசார் அறிவிப்பு appeared first on Dinakaran.