கோவை: கோவை பந்தய சாலை நடைபாதையில் இருந்த சந்தன மரம் வெட்டி கடத்தல் செய்யப்பட்ட நிலையில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாவட்ட ஆட்சியர் இல்லம், வருமான வரி அலுவலகம் உள்ள இடத்தில் இருந்த சந்தன மரம் வெட்டி கடத்தல் செய்யப்பட்டது. சந்தன மரத்தை வெட்டி கடத்தியது யார் என்பது குறித்து தனிப்படை அமைத்து காவல்துறை விசாரணையில் ஈடுபட்டுள்ளது.