திட்டக்குடி அருகே வார்டு உறுப்பினர் தர்ணா போராட்டம்

 

திட்டக்குடி, மே 20: கடலூர் மாவட்டம் மங்களூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கோடங்குடி ஊராட்சியில், பொதுமக்களின் கோரிக்கைகள் குறித்து வார்டு உறுப்பினர்கள் பேசும்போது, ஆட்களை வைத்து கொண்டு பேசுபவர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் துணை தலைவர் மிரட்டுவதாக கூறி. நேற்று கோடங்குடி ஊராட்சி மன்ற 3வது வார்டு உறுப்பினர் தயா பேரின்பம் திடீரென வாயில் கருப்பு துணியை கட்டி கொண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இது குறித்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற திட்டக்குடி போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட வார்டு உறுப்பினரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் உறுதி அளித்தனர். இதனையடுத்து போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து சென்றார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

The post திட்டக்குடி அருகே வார்டு உறுப்பினர் தர்ணா போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: