இதனை கோயில் ஆவணங்களை சரிபார்த்து கணக்கெடுத்தபோது இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள், தஞ்சை தனி வட்டாச்சியர் சங்கர் உள்ளிட்ட அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதை அடுத்து அறநிலையத்துறை உதவி ஆணையர் அனிதா உத்தரவின் பேரில் ஆக்கிரமிப்பாளர்கள் பிடியிலிருந்து நிலத்தை மீட்ட அலுவலர்கள் அந்த நிலம் கோவிலுக்கு சொந்தம் என்பது தொடர்பான அறிவிப்பு பலகையை வைத்தனர். தற்போது மீட்கப்பட்டுள்ள ரூ.111 கோடி மதிப்பிலான இந்த விலை நிலங்களில் குத்தகை முறையில் சாகுபடி செய்திடும் வகையில் ஏலத்திற்கு கொண்டுவர இருப்பதாக அலுவலர்கள் தெரிவித்தனர்.
The post தஞ்சை அடுத்த சூரக்கோட்டையில் ஆக்கிரமிப்பாளர்கள் பிடியிலிருந்து 147 ஏக்கர் நிலம் மீட்பு..!! appeared first on Dinakaran.