நர்சிடம் செல்போன் பறிப்பு

 

கோவை: கோவை ஆர்.எஸ்.புரம் சீனிவாசராகவ தெருவை சேர்ந்தவர் ஷாமிலா (21). இவர், கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று ஷாமிலா தனது வீட்டருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரை பைக்கில் பின் தொடர்ந்து வந்த 2 மர்ம நபர்கள் திடீரென அவரிடம் இருந்த செல்போனை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து ஷாமிலா ஆர்.எஸ்.புரம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு விசாரித்து வருகின்றனர்.

The post நர்சிடம் செல்போன் பறிப்பு appeared first on Dinakaran.

Related Stories: