இந்த வந்தே பாரத் ரயிலில் எக்ஸிகியூட்டிவ் வகுப்பு கட்டணம் ரூ.2,045-ம், கார் சேர் வகுப்பு கட்டணமாக ரூ.1,075-ம் நிர்ணயிக்கப்பட்டது.இந்த நிலையில், பிலாஸ்பூர் – நாக்பூர் இடையிலான வந்தே பாரத் ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. வந்தே பாரத் ரயில் இவ்வாறு நிறுத்தப்படுவது இந்தியாவில் இதுவே முதல்முறை. 50% அளவுக்கே முன்பதிவு நடப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.நிறுத்தப்பட்ட இந்த வந்தே பாரத் ரயிலானது செகந்திராபாத் – திருப்பதி இடையே இயக்கப்பட உள்ளது.அதே போல், பிலாஸ்பூர்- நாக்பூர் இடையே வந்தே பாரத் ரயிலுக்கு பதில் இனி தேஜஸ் ரயில் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post 50% அளவுக்கே முன்பதிவு.. இந்தியாவில் முதன்முறையாக பிலாஸ்பூர் – நாக்பூர் இடையிலான வந்தே பாரத் ரயில் சேவை நிறுத்தம்!! appeared first on Dinakaran.