அறங்காவலர்கள் நியமனம் தொடர்பாக தமிழ்நாடு அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு உச்சநீதிமன்றம் பாராட்டு..!

டெல்லி: இந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாகக் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் அறங்காவலர்கள் நியமனம் தொடர்பாக அரசு மேற்கொண்ட நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாகக் கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களுக்கு அறங்காவலர்கள் நியமனம் செய்வது குறித்து இந்து தர்ம பரிஷத் தாக்கல் செய்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் நீதிபதி ஏ.எஸ்.போபண்ணா மற்றும் சஞ்சய் கரோன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

இவ்வழக்கில் தமிழ்நாடு அரசின் சார்பில் அறங்காவலர்கள் நியமனம் செய்திட மாவட்டக் குழு அமைத்து அரசால் பிறப்பிக்கப்பட்ட ஆணைகள் மற்றும் திருக்கோயில்களில் அறங்காவலர்கள் நியமனம் செய்து பிறப்பிக்கப்பட்ட ஆணைகளின் நகல்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இவ்விசாரணையின் போது அறங்காவலர்களை நியமனம் செய்திட தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளை நீதிபதி பாராட்டினார். விரைவில் அனைத்துக் கோயில்களுக்கும் அறங்காவலர்களை நியமிக்க அரசுக்கு அறிவுறுத்தி, வழக்கினை ஆகஸ்ட் மாதம் கடைசி வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.

The post அறங்காவலர்கள் நியமனம் தொடர்பாக தமிழ்நாடு அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு உச்சநீதிமன்றம் பாராட்டு..! appeared first on Dinakaran.

Related Stories: