வழக்கை தென் மண்டல பசுமை தீர்ப்பாயத்தின் உறுப்பினர்களான நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணன், சத்திய கோபால் ஆகியோர் அமர்வு விசாரித்தது. நீர்த்தேக்கம் அமைக்கும் பணியை உடனே நிறுத்துமாறு உத்தரவிட்ட நீதிபதிகள், கட்டுமான பணிகளால் ஏற்பட்டுள்ள சுற்றுசூழல் பாதிப்புகளை ஆய்வு செய்ய குழு அமைத்து உத்தரவிட்டுள்ளனர். சுற்றுசூழல் விதிகளை முறையாக கடைப்பிடிக்காத காரணத்தால் ஆந்திர மாநில அரசின் நீர்வளத்துறைக்கு ரூ.100 கோடி அபராதமும் விதித்தனர். இந்த தொகையை 3 மாதங்களுக்குள் கிருஷ்ணா நதிநீர் மேலாண்மை ஆணையத்திற்கு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர். சுற்றுசூழல் விதிமீறல் விவகாரத்தில் தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் ரூ.100 கோடி அபராதம் விதித்து இருப்பது ஆந்திர அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
The post உரிய அனுமதியின்றி நீர்த்தேக்கம் அமைக்கும் பணிகளை மேற்கொண்டதற்காக ஆந்திராவின் நீர்வளத்துறைக்கு ரூ.100 கோடி அபராதம்!! appeared first on Dinakaran.