பின்னர், இரண்டு கைகளையும் தூக்கி கூப்பியவாறு யானையிடம் சரண்டர் ஆவது போல போஸ் கொடுத்து சாஷ்டாங்கமாக பெரிய கும்பிடு போட்டார். வழக்கமாக யானைகள் மனிதர்களை துரத்தும். அல்லது மனிதர்களை தாக்கும். ஆனால், அந்த யானையோ எதுவும் செய்யாமல், முருகேசன் செய்த சேட்டையை கண்டு சற்று பின்வாங்கியவாறு சாதுவாக நின்றது. யானைக்கு மறுபடியும் கும்பிடு போட்ட முருகேசன், சாவகாசமாக அங்கிருந்து நடையை கட்டினார். அதனை காரில் வந்த அவரது நண்பர் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
The post அவருக்கு நேரம் நல்லா இருந்திருக்கு… கும்பிடு போட்ட கான்ட்ராக்டர் சாந்தமாக பின்வாங்கிய யானை: வீடியோ வைரல் appeared first on Dinakaran.