ஒரேபாலின வழக்கு தீர்ப்பு ஒத்திவைப்பு

புதுடெல்லி: ஒரே பாலின ஜோடிகள் திருமணத்தை அங்கீகரிக்க வலியுறுத்தி நடந்த விசாரணையில் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. ஒரே பாலின திருமணம் தொடர்பான மனுக்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் கவுல், எஸ்ஆர் பட், ஹிமாகோலி, நரசிம்ஹா ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த 10 நாட்களாக விசாரித்து வந்தது. இந்த வழக்கில் அனைத்து தரப்பினரும் தங்கள் வாதங்களை நிறைவு செய்துவிட்டனர்.
இதையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பை ஒத்திவைப்பதாக உச்ச நீதிமன்றம் அறிவித்தது.

The post ஒரேபாலின வழக்கு தீர்ப்பு ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Related Stories: