புதுடெல்லி:டெல்லியில் வெளிநாடுகளுக்கு கோடிக்கணக்கில் பணம் அனுப்பி மோசடியில் ஈடுபட்ட ஹவாலா தரகரை அமலாக்கத்துறை நேற்று கைது செய்தது. டெல்லியை சேர்ந்த ஹவாலா தரகர் ஜெய் பிரகாஷ் சிங்கால். இவர் கிரிப்டோகரன்சி மற்றும் இதர சட்ட விரோத முறைகளில் வெளிநாடுகளுக்கு கோடிக்கணக்கில் பணம் அனுப்பியுள்ளார். வருமானவரித்துறை அதிகாிகள் கடந்த மாதம் ஜெய்பிரகாஷின் வீடு, அவருக்கு தொடர்புடைய இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனைகளை தொடர்ந்து அமலாக்கத்துறை ஜெய் பிரகாஷ் சிங்காலை நேற்று கைது செய்துள்ளது. சட்ட விரோத பண பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post டெல்லியில் ஹவாலா தரகர் கைது appeared first on Dinakaran.