ஆந்திராவில் பயங்கரம்!: ஐபோன் இயர்பட்ஸ் எடுத்ததாக சந்தேகத்தில் நண்பரை சக நண்பர்களே அடித்து கொன்ற கொடூரம்..!!

ஹைதராபாத்: ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் பெணாமலூரில் ஐபோன் இயர்பட்ஸ் எடுத்துக்கொண்ட சந்தேகத்தில் நண்பரை சக நண்பர்களே அடித்து கொன்ற அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. பெணாமலூரை சேர்ந்த அஜய் சாய், மணிகண்டா, நாகர்ஜுனா ஆகிய 3 பேர் நண்பர்கள். இவர்கள் அனைவரும் கடந்த 7ம் தேதி பெணாமலூரில் உள்ள சந்தோஷ் என்ற நண்பர் வீட்டிற்கு சென்றனர். அப்போது சந்தோஷ் வைத்திருந்த ஐபோன் இயர்பட்ஸ் கிடைக்காததால் அஜய் சாயிடம் கேட்டுள்ளனர்.

ஒருமுறை எடுத்தேன், மற்றொரு முறை இல்லை என மாற்றி மாற்றி கூறியதையடுத்து நண்பர்கள் 5 பேர் திங்கட்கிழமை இரவு நிடமனூரில் உள்ள ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்துக்கு அழைத்து சென்று கட்டை மற்றும் கைகளால் தாக்கியுள்ளனர். இதில் அஜய் சாய் மயங்கி விழுந்துள்ளார். அதன்பின் மூவரும் அங்கிருந்து தப்பியோடினர். மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட அஜய் சாய், இறந்துவிட்டதை மருத்துவர்கள் உறுதிசெய்து, போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். வழக்குப்பதிவு செய்த போலீசார், சில மணி நேரங்களிலேயே கொலையாளிகள் நாகர்ஜுனா, மணிகண்டா உட்பட 5 பேரை கைது செய்தனர்.

The post ஆந்திராவில் பயங்கரம்!: ஐபோன் இயர்பட்ஸ் எடுத்ததாக சந்தேகத்தில் நண்பரை சக நண்பர்களே அடித்து கொன்ற கொடூரம்..!! appeared first on Dinakaran.

Related Stories: