பின்னர் தமிழகம் கொண்டு வரப்பட்ட ஆஞ்சநேயர் சிலையை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கும்பகோணம் சிறப்பு நீதிமன்றத்தில் அண்மையில் ஒப்படைத்தனர். அதனை தொடர்ந்து நேற்று சிலையை வெள்ளூருக்கு கொண்டு வந்து கிராம மக்கள் முன்னிலையில் வரதராஜபெருமாள் கோயிலில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபி சைலேஷ்குமார் யாதவ் ஒப்படைத்தார். பின்னர் அவர் அளித்த பேட்டியில், ‘இந்த சிலையின் மதிப்பு ₹15 லட்சம் இருக்கலாம். இது 16, 17ம் நூற்றாண்டை சார்ந்த உலோக சிலையாகும். இதேபோல், பல்வேறு சிலைகள் அமெரிக்கா, லண்டன் உள்ளிட்ட வெளிநாடுகளில் உள்ளது. அவற்றையும் இந்தியா கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது’ என்றார்.
The post அரியலூர் அருகே கோயிலில் 11 ஆண்டுக்கு முன் திருடுபோன ஆஞ்சநேயர் சிலை ஆஸ்திரேலியாவில் மீட்பு appeared first on Dinakaran.