டூவீலர்-கார் மோதியதில் தொழிலாளி பலி

 

அய்யலூர், மே 10:எரியோடு அருகே உள்ள தோகமலைக்கோட்டையைச் சேர்ந்தவர் திருப்பதி (47). கல் உடைக்கும் தொழிலாளி. நேற்று முன்தினம் மாலை கோவிலூரில் இருந்து திண்டுக்கல் சாலையில் உள்ள தனியார் பெட்ரோல் பங்கிற்கு டூவிலரில் சென்று கொண்டிருந்தார். அப்போது திண்டுக்கலில் இருந்து கரூர் நோக்கிச் சென்ற கார், டூவீலர் மீது மோதியதில், படுகாயமடைந்த திருப்பதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.இது குறித்து எரியோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலாயுதம் வழக்குப்பதிவு செய்து, விபத்துக்கு காரணமான காரை ஓட்டி வந்த வைவேஸ்புரத்தைச் சேர்ந்த கண்ணனை(34) கைது செய்தார்.

The post டூவீலர்-கார் மோதியதில் தொழிலாளி பலி appeared first on Dinakaran.

Related Stories: