இதன்படி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 17ம் தேதி தனது பிறந்த நாளை முன்னிட்டு ஐந்து பெண் மற்றும் மூன்று ஆண் சிவிங்கி புலிகளை வனப் பகுதிக்குள் பிரதமர் மோடி விடுவித்தார். 8 சிவிங்கி புலிகளில் ஒன்றான ஷாஷா பெண் புலி உயிரிழந்தது. இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலம் குணோ பூங்காவில் மேலும் ஒரு சிவிங்கி புலி உயிரிழந்துள்ளதாக தலைமை வனப் பாதுகாவலர் தகவல் தெரிவித்தார். ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்டத்தில் இதுவரை 3 சிவிங்கி புலிகள் உயிரிழந்துள்ளன.
The post மத்திய பிரதேச மாநிலம் குணோ பூங்காவில் மேலும் ஒரு சிவிங்கி புலி உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.