முட்டை விலை 435 காசாக உயர்வு: வியாபாரிகளுக்கு தள்ளுபடி இல்லை

நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று மேலும் 5 காசுகள் உயர்த்தப்பட்டு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 435 காசுகளாக என்இசிசி நிர்ணயம் செய்துள்ளது. இது குறித்து தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் துணைத்தலைவர் சிங்கராஜ் கூறுகையில், கடந்த 1ம் தேதி முதல் நோ மைனஸ் நெக் ரேட் மிக சிறப்பாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. வியாபாரிகள் சிலர் ரொக்கத் தள்ளுபடி என்று கூறி சில கோழிப்பண்ணையாளர்களிடம் முட்டை வாங்குகிறார்கள். என்இசிசி அறிவிக்கும் விலை என்பது ரொக்கத்துக்கு முட்டை விற்பனைக்கானதுதான். எனவே பண்ணையாளர்கள், வியாபாரிகள் மொத்தமாக முட்டைக்கு பணம் கொடுக்கும் போது, தனியாக எதுவும் கழித்துக் கொடுக்கத் தேவையில்லை என்றார்.

 

The post முட்டை விலை 435 காசாக உயர்வு: வியாபாரிகளுக்கு தள்ளுபடி இல்லை appeared first on Dinakaran.

Related Stories: