தேசிய பட்டியலின ஆணையத்திற்கு தடை உத்தரவு பிறப்பிக்க அதிகாரமில்லை :சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை : தேசிய பட்டியலின ஆணையத்திற்கு தடை உத்தரவு பிறப்பிக்க அதிகாரமில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.கோவில் நிலம் ஆக்கிரமிப்பை அகற்ற தடை விதித்த ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்.சாட்சிகளுக்கு சம்மன் அனுப்பவும், ஆவணங்களை பெறவும் மட்டுமே பட்டியலின ஆணையத்திற்கு உரிமை உள்ளதாக ஐகோர்ட் தெரிவித்துள்ளது. மாதேபள்ளியில் கோவில் நில ஆக்கிரமிப்பு மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்ற ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து மனு தாக்கல் செய்யப்பட்டது.

The post தேசிய பட்டியலின ஆணையத்திற்கு தடை உத்தரவு பிறப்பிக்க அதிகாரமில்லை :சென்னை உயர்நீதிமன்றம் appeared first on Dinakaran.

Related Stories: