கர்நாடக தேர்தலில் பாஜ தோற்றால் மகிழ்ச்சி: மம்தா சொல்கிறார்

மால்டா: கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பாஜ தோல்வியடைந்தால் மகிழ்ச்சி அடைவேன் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார். மேற்குவங்க மாநிலம் மால்டா மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டு பேசினார். அப்போது, “பாஜ தனது சொந்த நலன்களுக்காக இந்து மதத்தை இழிவுப்படுத்துகிறது.

இந்து மதத்தின் உண்மையான ஆன்மீகத்தை பாஜ அழித்து விட்டது. டெல்லி ஜந்தர் மந்தரில் போராடும் மல்யுத்த வீரர்கள் மீது காவல்துறை நடத்திய தாக்குதல் கண்டனத்துக்குரியது. கர்நாடக தேர்தலில் நீங்கள் விரும்பும் வேறு எந்த கட்சிக்கு வேண்டுமானாலும் வாக்களியுங்கள். கர்நாடகாவில் பாஜவின் வீழ்ச்சி தொடங்கினால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்” இவ்வாறு தெரிவித்தார்.

The post கர்நாடக தேர்தலில் பாஜ தோற்றால் மகிழ்ச்சி: மம்தா சொல்கிறார் appeared first on Dinakaran.

Related Stories: