யமுனாவின் அலறல் சத்தத்தை கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் தீயை அணைத்து ஆம்புலன்ஸ் மூலம் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து யமுனாவின் கணவர் ஆனந்த் கொடுத்த புகாரின் பேரில் மடிப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் இந்த வழக்கானது செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் கடந்த 5 வருடங்களாக நடந்தது. இந்த நிலையில் நேற்று இந்த வழக்கு நீதிபதி எழிலரசு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றம் நிரூபிக்கப்பட்டதால் ராஜாவுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.30 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
The post தன்னுடன் பழகுவதை நிறுத்தியதால் அமிலம் ஊற்றி பெண்ணை எரித்து கொன்றவருக்கு ஆயுள் தண்டனை: மகிளா நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.