பாஜ எம்எல்ஏ வீட்டில் வருமான வரித்துறை சோதனை

கொல்கத்தா: மேற்கு வங்க மாநில பாஜ எம்எல்ஏ கிருஷ்ண கல்யானி. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்த அவர் அதில் இருந்து விலகி கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முன் பாஜவில் இணைந்தார். இதனை தொடர்ந்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இந்நிலையில் எம்எல்ஏ கிருஷ்ண கல்யானிக்கு சொந்தமான இடங்களில் நேற்று வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினார்கள். அவர் அளவுக்கதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக வந்த புகாரை அடுத்து வருமான வரித்துறையினர் இந்த சோதனையை மேற்கொண்டனர். ராய்கன்சில் உள்ள அவரது வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

The post பாஜ எம்எல்ஏ வீட்டில் வருமான வரித்துறை சோதனை appeared first on Dinakaran.

Related Stories: