அகமதாபாத்தில் இன்று மோதல் குஜராத் தொடர் வெற்றிக்கு டெல்லி தடை போடுமா?

அகமதாபாத்:ஐபிஎல் தொடரில் இன்று அகமதாபாத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 44வது லீக் போட்டியில் குஜராத் டைடன்ஸ்- டெல்லி அணிகள் மோதுகின்றன. 12 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடம் வகிக்கும் குஜராத் கம்பீரத்துடன் உள்ளது. பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் வலுவாக உள்ளது. சுப்மன்கில், மில்லர், விஜய்சங்கர் பேட்டிங்கிலும், முகமதுஷமி, ஜோஸ்லிட்டில், நூர்அகமது பந்துவீச்சிலும் அசத்தி வருகின்றனர்.

டெல்லி அணியை பொறுத்தவரை 8 போட்டிகளில் ஆடி 2 வெற்றி, 6 தோல்வியுடன் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இனிவரும் ஆட்டம் எல்லாமே டெல்லிக்கு வாழ்வா, சாவா என்ற நிலைதான். எஞ்சி உள்ள 6 லீக் போட்டிகளிலும் வெற்றிபெற்றால்தான் பிளே ஆப் சுற்றை எண்ணிப்பார்க்க முடியும். டெல்லி அணியை பொறுத்தவரை ஒருங்கிணைந்து ஆடாததே தொடர் தோல்விக்கு காரணமாக உள்ளது. இருப்பினும் இன்றைய போட்டியில் குஜராத்தின் தொடர் வெற்றிக்கு டெல்லி தடை போடுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

பிரதமர் பங்கேற்கும் கூட்டங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் அவர் பங்கேற்கும் கூட்டம் நடக்கும் பகுதிகளில் ட்ரோன்கள் பறக்க அந்தந்த மாவட்ட நிர்வாகம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இதனிடையே காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக இன்றும் நாளையும் பெங்களூருவில் தமிழர்கள் அதிகம் வாழும் பேரவை தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் எம்பியுமான தொல். திருமாவளவன் பிரசாரம் செய்கிறார்.

The post அகமதாபாத்தில் இன்று மோதல் குஜராத் தொடர் வெற்றிக்கு டெல்லி தடை போடுமா? appeared first on Dinakaran.

Related Stories: