சிவகங்கையில் நாளை மின்தடை

 

சிவகங்கை: சிவகங்கை,காளையார்கோவில் பகுதியில் நாளை(மே 2) மின் தடை செய்யப்பட உள்ளது.சிவகங்கை தொகுப்பு துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதையொட்டி சிவகங்கை நகரில் ராம் நகர், லெட்சுமண் நகர், பொதிகை நகர், முத்துச்சாமி நகர், ராமசாமி நகர், கொட்டகுடி தெரு, கோகலோ ஹால் தெரு, காந்தி வீதி, சிவன் கோவில் பகுதி, கோட்டை முனியாண்டி கோவில் பகுதி, சரோஜினி தெரு, உடைசா ஊரணி பகுதி, மணி ரங்கபுரம் பகுதிகளுக்கு நாளை காலை 9மணி முதல் பிற்பகல் 2மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.

காளையார்கோவில் துணை மின் நிலையத்தில் கொல்லாவயல் மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதையொட்டி கருமந்தக்குடி, அதப்படக்கி, சாத்தரசன்கோட்டை, செம்பனூர், பெரியகண்ணனூர், மல்லல் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளுக்கு நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 2மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.இடையமேலூர் துணை மின் நிலையத்தில் தமறாக்கி உயரழுத்த மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதையொட்டி டிஎம்.காலனி, கண்டாங்கிபட்டி, வாகுளத்துப்பட்டி, காரமோடை, குமாரபட்டி, தமறாக்கி, கொத்தங்குளம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளுக்கு நாளை காலை 9மணி முதல் பிற்பகல் 2மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.

The post சிவகங்கையில் நாளை மின்தடை appeared first on Dinakaran.

Related Stories: