திருச்சியில் இளம்பெண் மாயம்

 

தில்லைநகர்: திருச்சி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த இளம்பெண் மாயமானார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். திருச்சி புத்தூர் ராமலிங்கநகர் ஆறாவது குறுக்குத் தெருவில் வசித்து வருபவர் மூக்கன்மணி (63). இவரது மகள் சந்தானலட்சுமி (28), திருச்சியில் உள்ள தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

இவர் கடந்த 27ம் தேதி காலை 8 மணிக்கு வேலைக்கு சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை. இதனால் அவரது தந்தை மூக்கன்மணி பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் உறையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.  புகாரின் அடிப்படையில் காவல்ஆய்வாளர் ராஜா வழக்குப்பதிவு செய்து காணாமல்போன இளம் பெண்ணை தேடி வருகின்றனர்.

The post திருச்சியில் இளம்பெண் மாயம் appeared first on Dinakaran.

Related Stories: