சித்திரை தேர் திருவிழாவை முன்னிட்டு அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோயிலில் திருக்கல்யாணம்

 

குளித்தலை: சித்திரை தேர் திருவிழாவை முன்னிட்டு அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோயிலில் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த அய்யர்மலையில் உள்ளது சிவ தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற ரத்தகிரீஸ்வரர் கோயில்.இந்த கோயில் 2017 படி மலை உச்சியில் உள்ளது. ஆண்டுதோறும் சித்திரை தேர் திருவிழா12 நாள் நடைபெறுவது வழக்கம்.உள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்தும் வெளி மாவட்டங்கள் வெளி மாவட்ட மாநிலத்திலிருந்தும் லட்சக்கணக்கான பொதுமக்கள் பக்தர்கள் கலந்து கொள்ளும் விழாவாக இருந்து வருகிறது.

இச்சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் சித்திரை தேர் திருவிழா 19ம் தேதி கால்கோள் விழாவுடன் தொடங்கியது. 25ம் தேதி காலை 6 மணிக்கு மேல் 9 மணிக்குள் விக்னேஸ்வர் பூஜை செய்து, 12 மணிக்குள் மலை உச்சியில் முதல் நாள் நிகழ்ச்சியாக கொடியேற்றத்துடன் தொடங்கியது. இரவு புஷ்ப விமானத்தில் சாமி புறப்பாடு நடைபெற்றது.திருவிழாவில் முக்கிய விழாவான ஐந்தாம் நாள் நேற்று மாலை ரத்தினகிரீஸ்வரர் உடனுரை சுரும்பர் குழலி திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. முன்னதாக கோயிலில் இருந்து சாமி எடுத்து வரப்பட்டு திருக்கல்யாண மண்டபத்தில் பால் தயிர், இளநீர், சந்தனம், திருமஞ்சனம், மஞ்சள் வகைகள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அறம் செய்து திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் சுற்று வட்டாரத்தில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

எட்டாம் நாள் மே 2 ம் தேதி மதியம் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, பகல் பல்லக்கு இரவு 12 மணி அளவில் சுவாமி குதிரை வாகனம் அம்மன் புஷ்ப வாகனத்தில் வீதி உலா நடைபெறுகிறது. ஒன்பதாம் நாள் திருவிழா மே 3ம் தேதி புதன்கிழமை அதிகாலை 4 மணிக்கு தேர் ஏறும் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று காலை 5.30 மணிக்கு மேல்6.30 மணிக்குள் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது விழாவிற்கான ஏற்பாட்டினை அறநிலை துறை உதவி ஆணையர் ஜெயதேவி, செயல் அலுவலர் அனிதா, மற்றும் கோவில் குடி பாட்டு காரர்கள், சிவாச்சாரியார்கள் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

The post சித்திரை தேர் திருவிழாவை முன்னிட்டு அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோயிலில் திருக்கல்யாணம் appeared first on Dinakaran.

Related Stories: