பைஜூஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ. வீடு, அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை..!!

பெங்களூரு: பைஜூஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ. ரவீந்திரனின் வீடு, அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். பெங்களூருவில் உள்ள பைஜூஸ் நிறுவன சி.இ.ஓ. ரவீந்திரனின் வீடு, அலுவலகத்தில் சோதனை நடைபெற்று வருகிறது. அந்நிய செலாவணி விதிமீறல் தொடர்பான புகாரில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளது. சோதனையில் குற்றச்சாட்டு தொடர்பான ஆவணங்கள், டிஜிட்டல் தரவுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

The post பைஜூஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ. வீடு, அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை..!! appeared first on Dinakaran.

Related Stories: