நர்சுக்கு கொலை மிரட்டல் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

புதுச்சேரி: நர்சுக்கு கொலை மிரட்டல் விடுத்த இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். புதுச்சேரி, மேட்டுப்பாளையம், மருத்துவமனை வீதியைச் சேர்ந்தவர் சிவசங்கரி (37). நர்சாக பணிபுரிந்து வருகிறார். இவர் கோரிமேடு போலீசில் அளித்த புகாரில், கடந்த மார்ச் 9ம் தேதி மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த வித்யா (35) மற்றும் புதுச்சேரி ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் அனில்குமார் ஆகியோர் தன்னை திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறியிருந்தார். அதன்படி போலீசார், ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் அனில்குமார் மற்றும் வித்யா மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் நர்சுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் அனில்குமாரை சஸ்பெண்ட் செய்து டிஜிபி மனோஜ்குமார் லால் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

The post நர்சுக்கு கொலை மிரட்டல் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Related Stories: