கிருஷ்ணா கல்லூரியில் பட்டமளிப்பு விழா

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே கிழம்பி கிராமத்தில் உள்ள காஞ்சி ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 26வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில், காஞ்சி கிருஷ்ணா கல்வி அறக்கட்டளை நிறுவனர் போஸ் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக சென்னை பல்கலைக்கழக புவியியல் துறை பேராசிரியர் பாஸ்கரன் கலந்து கொண்டு, ‘சென்னைப் பல்கலைக் கழக அளவில் 4வது தரம் பெற்ற ரமணாதேவி, 6வது தரம் பெற்ற மாணவி பிரியா, 7வது தரம் பெற்ற நித்யா, 8வது தரம் பெற்ற அபித்ரா, 8வது தரம் பெற்ற கௌசல்யா, 8வது தரம் பெற்ற சத்யா, 9வது தரம் பெற்ற பவித்ரா, 10வது தரம் பெற்ற தனலட்சுமி ஆகிய மாணவிகளுக்கு பட்டங்கள் மற்றும் பதக்கங்கள் மற்றும் 920 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தாளாளர் அரங்கநாதன், தலைவர் ஜெயகுமார், செயலாளர் தயாளன், பொருளாளர் மோகனரங்கன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக கல்லூரி முதல்வர் வெங்கடேசன் அனைவரையும் வரவேற்று பேசினார். முடிவில் துணை முதல்வர் பிரகாஷ் நன்றி கூறினார்.

The post கிருஷ்ணா கல்லூரியில் பட்டமளிப்பு விழா appeared first on Dinakaran.

Related Stories: