சித்தூர் காணிப்பாக்கம் விநாயகர் கோயிலில் 5 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம்

சித்தூர் : சித்தூர் காணிப்பாக்கம் விநாயகர் கோயிலில் 5 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.சித்தூர் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்று காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயில். இக்கோயிலுக்கு சித்தூர் மாவட்டம் மட்டுமின்றி தெலங்கானா, தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

அதேபோல், பக்தர்கள் தங்களின் வேண்டுதலுக்கு ஏற்ப கோயிலில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ள உண்டியல்களில் தங்கம், வெள்ளி, பணம் உள்ளிட்டவை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் சனிக்கிழமை மற்றும் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதின. இதனால், நேற்று 5 மணிநேரம் பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு எவ்வித இடையூறும் இல்லாத வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டது. விநாயகரை தரிசித்த பிறகு பக்தர்களுக்கு லட்டு உள்ளிட்ட தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டது. மேலும், அன்னதானம் கோயில் நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டது.

 

The post சித்தூர் காணிப்பாக்கம் விநாயகர் கோயிலில் 5 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் appeared first on Dinakaran.

Related Stories: