திருப்பூர், ஏப். 24: திருவள்ளுவர் நற்பணி மன்றம் மற்றும் 2ம் ஆண்டு ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கபடி போட்டி, சாமுண்டிபுரத்தில் நடந்தது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான அணிகள் கலந்துகொண்டன. இதில் ஆண்கள் பிரிவில் முதல் பரிசு ரூ.21 ஆயிரம் மற்றும் கோப்பை, 2வது பரிசு ரூ.12 ஆயிரம் மற்றும் கோப்பை என பல்வேறு பரிசுகளும், பெண்கள் பிரிவில் முதல் பரிசு ரூ.10 ஆயிரம் மற்றும் 2வது பரிசு ரூ.7 ஆயிரம் என வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும், சிறப்பாக விளையாடிய வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு டி.வி பரிசு வழங்கப்பட்டது.
The post சாமுண்டிபுரத்தில் கபடி போட்டி appeared first on Dinakaran.