சீர்காழி அருகே வள்ளுவக்குடியில் புதிய ஊராட்சி மன்ற கட்டிடம் கட்டும் பணி

சீர்காழி: சீர்காழி அருகே வள்ளுவக்குடியில் ரூ.42லட்சம் செலவில் புதிய ஊராட்சி மன்ற கட்டிடம் கட்டும் பணியை எம்எல்ஏ பன்னீர் செல்வம் துவங்கி வைத்தார். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வள்ளுவக்குடி ஊராட்சியில் ரூ.42 லட்சம் செலவில் புதிய ஊராட்சி மன்ற கட்டிடம் கிராம நிர்வாக அலுவலக கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. விழாவில் சீர்காழி எம்எல்ஏ பன்னீர்செல்வம் கலந்து கொண்டு புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார். விழாவில் சீர்காழி வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கோவன், பொறியாளர் கலையரசன், சீர்காழி திமுக ஒன்றிய செயலாளர் பிரபாகரன், மாவட்ட கவுன்சிலர் விஜேஸ்வரன், ஒன்றிய துணை செயலாளர் முருகன், ஊராட்சி தலைவர் பத்மா, ஊராட்சி செயலாளர் ராமச்சந்திரன், ஊராட்சி துணைத் தலைவர் பிரபாகரன் கலந்து கொண்டனர்.

The post சீர்காழி அருகே வள்ளுவக்குடியில் புதிய ஊராட்சி மன்ற கட்டிடம் கட்டும் பணி appeared first on Dinakaran.

Related Stories: