இந்தோனேசியா தீவில் 2 நிலநடுக்கம்: பொதுமக்கள் பீதி

ஜகர்தா: இந்தோனேசியாவின் கெபுலாவான் பாடு தீவு பகுதியில் இன்று அதிகாலை அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. முதல் நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 6.1 ஆகவும், அதைத் தொடர்ந்து சில மணிநேரங்களுக்குப் பிறகு 5.8 ரிக்டர் அளவிலான இரண்டாவது நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் முதல் நிலநடுக்கம் 43 கிமீ (26.72 மைல்) ஆழத்திலும், இரண்டாவது நிலநடுக்கம் 40 கிமீ (24.85 மைல்) ஆழத்திலும் ஏற்பட்டதாக அந்த மையம் தெரிவித்துள்ளது. அடுத்தடுத்த இந்த நிலநடுக்கங்களால், உயிர் சேதமோ பொருட் சேதமோ குறித்த விபரங்கள் வெளியாகவில்லை.

The post இந்தோனேசியா தீவில் 2 நிலநடுக்கம்: பொதுமக்கள் பீதி appeared first on Dinakaran.

Related Stories: