போச்சம்பள்ளி, ஏப்.21: போச்சம்பள்ளி தாலுகா, புளியம்பட்டி ஊராட்சி திருவயலூர் கிராமத்தில் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் ரங்கநாதன் தலைமை தாங்கினார். போச்சம்பள்ளி இன்ஸ்பெக்டர் பிரபாவதி கலந்து கொண்டு, பெண் குழந்தைகள் செல்போன் பயன்படுத்துவதை தவிர்க்கவும், பெண் குழந்தைகளை தொடுதல் பற்றிய விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது. நிகழ்ச்சியில் ஏட்டு கவிதா, பெண் போலீஸ் மகாராணி மற்றும் சுற்றுவட்டார பெண்கள் கலந்து கொண்டனர்.
The post பாலியல் தடுப்பு சட்ட விழிப்புணர்வு appeared first on Dinakaran.