முதுகலை கியூட் தேர்வுக்கு 5ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

புதுடெல்லி, ஏப்.21: மத்திய பல்கலைக்கழகங்களில் முதுகலைப்பிரிவுகளில் சேருவதற்கான கியூட் நுழைவு தேர்வு ஜூன் மாதம் 5ம் தேதி முதல் 12ம் தேதி வரை நடைபெறவுள்ளது. கியூட் தேர்வில் கலந்து கொள்வதற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஏப்ரல் 19ம் தேதி என முன்னர் அறிவிக்கப்பட்டு இருந்தது. விண்ணப்பிக்கும் கடைசி நாள் நேற்று முன்தினத்துடன் முடிவடைந்தது. இந்நிலையில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதியை தேசிய தேர்வு முகமை நீட்டித்துள்ளது. , மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு மே 5ம் தேதி வரை கியூட் முதுகலை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

The post முதுகலை கியூட் தேர்வுக்கு 5ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Related Stories: