விருத்தாச்சலம் அருகே முந்திரி தோப்பில் நாட்டு வெடி வெடித்ததில் காயமடைந்த 4 பேருக்கு சிகிச்சை

கடலூர்: விருத்தாச்சலம் அருகே முந்திரி தோப்பில் விலங்குகளுக்காக வைத்த நாட்டு வெடி வெடித்ததில் காயமடைந்த 4 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குருவன்குப்பம் கிராமத்தில் கூலி தொழிலாளர்கள் முந்திரிக்கொட்டை பொறுக்கியபோது நாட்டு வெடிகுண்டு வெடித்துள்ளது. தொழிலாளி ரங்கநாதன் அங்கு உள்ள குப்பையில் கால் வைத்தபோது, வெடி வெடித்ததில் கால் துண்டிக்கப்பட்டது. பலத்த காயம் அடைந்த சக தொழிலாளிகள் இளையகுமார், மருதுபாண்டி, ரகுபதி விருத்தாச்சலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post விருத்தாச்சலம் அருகே முந்திரி தோப்பில் நாட்டு வெடி வெடித்ததில் காயமடைந்த 4 பேருக்கு சிகிச்சை appeared first on Dinakaran.

Related Stories: