எதிர்க்கட்சி தலைவர் பேசுவதை நேரடி ஒளிபரப்பு செய்யக்கோரி அதிமுக வெளிநடப்பு

பேரவையில் நேற்று மாலை மானியக் கோரிக்கை விவாதம் முடிந்ததும் அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி எழுந்து, ‘‘எதிர்க்கட்சி தலைவர் பேசுவதை நேரடி ஒளிபரப்பு செய்ய தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால், அவ்வாறு ஒளிபரப்பப்படுவதில்லை’’ என்றார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்: நேரடி ஒளிபரப்பு செய்வது அந்தந்த தொலைக்காட்சிகளின் விருப்பத்தை பொறுத்தது. நாங்கள் இதை ஒளிபரப்ப வேண்டும் என்று எதையும் குறிப்பிட்டு சொல்ல முடியாது. இது தான் உண்மை. இதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

தொடர்ந்து பேசிய அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி, ‘‘எதிர்கட்சி தலைவர் பேச்சை நேரலையில் கொடுங்கள். இதை பேரவை தலைவருக்கும், முதல்வருக்கும் கோரிக்கையாக வைக்கிறேன்’’ என்று கூறிவிட்டு, அதிமுக உறுப்பினர்களுடன் வெளிநடப்பு செய்தார்.

The post எதிர்க்கட்சி தலைவர் பேசுவதை நேரடி ஒளிபரப்பு செய்யக்கோரி அதிமுக வெளிநடப்பு appeared first on Dinakaran.

Related Stories: