2 மாவோயிஸ்ட் என்கவுன்டரில் சுட்டுக்கொலை

பிஜப்பூர்: சட்டீஸ்கரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் 2 மாவோயிஸ்ட்டுக்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். சட்டீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டத்தில் மாவோயிஸ்ட்டுக்கள் நடமாட்டம் இருப்பதாக வந்த தகவலை அடுத்து மாவட்ட ரிசர்வ் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பதுங்கி இருந்த மாவோயிஸ்ட்டுக்கள் வீரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதனை தொடர்ந்து வீரர்கள் நடத்திய பதிலடியில் 2 மாவோயிஸ்ட்டுக்கள் கொல்லப்பட்டனர். மேலும் காயமடைந்த நிலையில் 2 மாவோயிஸ்ட்டுக்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post 2 மாவோயிஸ்ட் என்கவுன்டரில் சுட்டுக்கொலை appeared first on Dinakaran.

Related Stories: