உயிருள்ளவரை தேசியவாத காங். கட்சிக்காக பணியாற்றுவேன்: வதந்திகளுக்கு அஜித் பவார் முற்றுப்புள்ளி

புனே: தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜ செல்லவுள்ளதாக தகவல் வெளியான நிலையில் உயிருள்ளவரை தேசியவாத காங்கிரஸ் கட்சிக்காக பணியாற்றுவேன் என்று அஜித் பவார் தெரிவித்துள்ளார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான அஜித் பவார் அக்கட்சியில் இருந்து விலகி பாஜவில் இணையவுள்ளதாக தகவல்கள் வௌியாகி வந்தன. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் இது குறித்து கூறுகையில், ‘‘அஜித் பவார் கட்சி பணிகளில் மும்முரமாக உள்ளார்.

இந்த விவகாரத்தை ஊடகங்கள் இழுத்தடிக்க தேவையில்லை” என்றார். அஜித் பவார் கூறுகையில், “தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளதாக வெளியான செய்திகளில் துளியும் உண்மை கிடையாது. உயிருடன் இருக்கும் வரை தேசியவாத காங்கிரஸ் கட்சிக்காக பாடுபடுவேன்” என்றார்.

The post உயிருள்ளவரை தேசியவாத காங். கட்சிக்காக பணியாற்றுவேன்: வதந்திகளுக்கு அஜித் பவார் முற்றுப்புள்ளி appeared first on Dinakaran.

Related Stories: