வீட்டிலேயே பிரசவம் பார்த்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள்

சத்தியமங்கலம், ஏப்.17: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதி குன்றி மலை கிராமத்தை சேர்ந்த கார்த்தி என்பவருடைய மனைவி பசுவி(23). நிறைமாத கர்ப்பிணியான பசுவி நேற்று அதிகாலை பிரசவ வலியால் துடித்தார்.அவரது உறவினர்கள் உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக கடம்பூரில் இருந்து அடர்ந்த வனப்பகுதி வழியாக 108 ஆம்புலன்ஸ் குன்றி பகுதியை சென்றடைந்தது.அவரை பரிசோதிக்க சென்ற அவசர சிகிச்சை மருத்துவ உதவியாளர் விஜய் வீட்டின் உள்ளே நுழையும் போதே தாயின் பிரசவ வலி அதிகரிக்கவே அங்கேயே தக்க மருத்துவ உபகரணங்களின் உதவியுடன் பிரசவம் பார்த்ததில் அழகான ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் தாயுக்கும் சேயுக்கும் முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்டு கடம்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி கொடுக்கப்பட்டு மேல் சிகச்சைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் இருவரும் பத்திரமாக அனுமதிக்கப்பட்டனர்.தக்க நேரத்தில் துரிதமாக செயல்பட்டு பெண்ணுக்கு பிரசவம் பார்த்த 108 ஆம்புலன்ஸ் மருத்துவ நுட்புநர் விஜய் மற்றும் வாகன ஓட்டுனர் ராஜ்குமார் ஆகியோரின் இந்த செயலை கடம்பூர் மற்றும் குன்றி பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

The post வீட்டிலேயே பிரசவம் பார்த்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் appeared first on Dinakaran.

Related Stories: