காஷ்மீர் நிலவரம்: அமித்ஷா ஆய்வு

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரில் நிலவி வரும் பாதுகாப்பு சூழல் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் டெல்லியில் நேற்று ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், ஜம்மு காஷ்மீரின் சட்டம் மற்றும் ஒழுங்கு, எல்லைக்கட்டுப்பாடு கோடு மற்றும் சர்வதேச எல்லை, எல்லைதாண்டிய ஊடுருவல்கள் மற்றும் சிறுபான்மை சமூகத்தினர் குறிவைத்து தாக்கப்படுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ஜம்மு காஷ்மீர் ஆளுநர் மனோஜ் சின்கா, உள்துறை செயலாளர் அஜய் குமார் பல்லா , ஜம்மு டிஜிபி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post காஷ்மீர் நிலவரம்: அமித்ஷா ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: