கொரோனா பாதிப்பு 10,000ஐ தாண்டியது

புதுடெல்லி: நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நேற்று ஒருநாள் கொரோனா பாதிப்பு 8 ஆயிரத்தை நெருங்கியது. அதாவது நேற்று 7 ஆயிரத்து 830 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், இன்று ஒன்றிய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிப்பின்படி ஒருநாள் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை தாண்டி அதிரவைத்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு 10,158 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவிற்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 44,998 ஆக உயர்ந்துள்ளது.

The post கொரோனா பாதிப்பு 10,000ஐ தாண்டியது appeared first on Dinakaran.

Related Stories: