ராமேஸ்வரம் கோயிலில் 15 நாள் உண்டியல் வசூல் ரூ.1.14 கோடி

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கை வசூல் எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. கோயில் கிழக்கு திருக்கல்யாண மண்டபத்தில் துணை கமிஷனர் மாரியப்பன் முன்னிலையில் காணிக்கை எண்ணப்பட்டது. இதில் ரூ.1 கோடியே 14 லட்சத்து 55 ஆயிரத்து 825 ரொக்கம், தங்கம் 92 கிராம் 200 மி.கிராம், வெள்ளி 3 கிலோ 250 கிராம், வெளிநாட்டு பணம் 83 வசூலாகி இருந்தது. கடந்த 15 நாட்களில் மட்டும் பக்தர்களால் காணிக்கையாக ரூ.1.14 கோடி உண்டியலில் செலுத்தப்பட்டுள்ளது .

The post ராமேஸ்வரம் கோயிலில் 15 நாள் உண்டியல் வசூல் ரூ.1.14 கோடி appeared first on Dinakaran.

Related Stories: