மகாத்மா ஜோதிபா புலே ஏற்றிய சாதிக்கெதிரான சுடர் நமக்கு வழிகாட்டட்டும்: முதல்வர் டிவிட்

சென்னை: மகாத்மா ஜோதிபா புலே ஏற்றிய சாதிக்கெதிரான சுடர் என்றும் நமக்கு வழிகாட்டட்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவரின் டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:அறிவை ‘மூன்றாம் கண்’ என்று ஆழமான புரிதலோடு அழைத்து, ஒடுக்கப்பட்டோருக்குக் கல்வியை வழங்கிய தொலைநோக்காளர்.

சத்தியசோதக் (உண்மைதேடுவோர்) திருமணங்கள் மூலம் பார்ப்பனியச் சடங்குகள் தவிர்த்த திருமணங்களுக்கு வழிவகுத்த முன்னோடி. மகாத்மா ஜோதிபா புலே ஏற்றிய சாதிக்கெதிரான சுடர் என்றும் நமக்கு வழிகாட்டட்டும்.

The post மகாத்மா ஜோதிபா புலே ஏற்றிய சாதிக்கெதிரான சுடர் நமக்கு வழிகாட்டட்டும்: முதல்வர் டிவிட் appeared first on Dinakaran.

Related Stories: